உலகில் சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
சுற்றுலாப்பயணிகளின் வருகை தற்சமயம் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் இது இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாரிய உதவியாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த சில மாதங்களாக அதிகளவு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு படையெடுத்துள்ளதுடன் தினமும் கிட்டத்தட்ட 3000 சுற்றுலா பயணிகள் வருகை தருவதாகவும் இதற்காக 22 விமான நிறுவனங்கள் தற்போது இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.