21
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

Share

இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதற்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில் நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்ட தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்கான வெளிநாட்டு பிரிவு செயல்திறன் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிகபட்ச வாகன இறக்குமதி செலவு கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த நிலையில் அதற்காக 255.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் 2025 ஆம் ஆண்டில் இதுவரை ஒவ்வொரு மாதமும் நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்காக மேற்கொள்ளப்பட்ட செலவு விபரம் இவ்வாறு அமைந்துள்ளது.

ஜனவரியில் 29.1 மில்லியன் அமெரிக்க டொலர்களும், பெப்ரவரியில் 22.3 மில்லியன் அமெரிக்க டொலர்களும், மார்ச்சில் 54.0 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஏப்ரலில் 145.6 மில்லியன் அமெரிக்க டொலர்களும், மேயில் 125.2 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஜூனில் 169.6 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஜூலை 206.0 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஓகஸ்டில் 255.7 மில்லியன் அமெரிக்க டொலர்களும் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் தலைவர் பிரபாகரன்! மகிந்தவை மையப்படுத்தி நாமல் கொடுத்த சாட்டையடி!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன...

24
இலங்கைசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13 ஆம் திகதிக்கு...

23
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவி உள்ள ஆபத்தான நபர்! மக்களின் உதவியை நாடும் காவல்துறை

2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய ஹெரோயின் தொகையுடன் தொடர்புடைய பாகிஸ்தானியரைக்...

22
இந்தியாசெய்திகள்

ஆட்டத்தை ஆரம்பித்த திமுக – தவெக பொதுச் செயலாளரை கைது செய்ய தனிப்படை

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர்...