rtjy 123 scaled
இலங்கைசெய்திகள்

மீளாய்வு செய்ய தயாராகும் IMF

Share

மீளாய்வு செய்ய தயாராகும் IMF

இலங்கைக்கான விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி பற்றிய முதலாவது மீளாய்வு கூட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அன்றைய தினம் முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை கொழும்பில் தங்கியிருப்பார்கள்.

நாட்டின் பொருளாதார கொள்கை மற்றும் மறுசீரமைப்புக்காக ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு கடந்த மார்ச் மாதம் 300 கோடி டொலர் விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதியின் கீழ் 48 மாதங்களுக்கான நீண்டகால வேலைத்திட்டத்திற்கு அனுமதியளித்தது.

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தல், கடன் நிலைமையில் இருந்து மீளுதல், வறியவர்கள் மற்றும் எளிதில் பாதிக்கக்கூடியவர்கள் மீதான பொருளாதார அழுத்தங்களை குறைத்தல், நிதி பிரிவின் ஸ்திரத்தன்மைய பாதுகாத்தல், நிர்வாக துறையை பலப்படுத்தல் என்பன நிதி வசதியளிப்பதன் நோக்கமாகும்.

தற்போது நாடு என்ற வகையில் இருதரப்பு கடன் மாத்திரம் செலுத்தப்படுவதில்லை. எனைய அனைத்து கடன்களும் தவணை அடிப்படையில் அரசாங்கம் செலுத்தி வருகிறது.

நாட்டில் 360 கோடி டொலர் வெளிநாட்டு நிதி கையிருப்பு காணப்படுவதாக ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அவிசாவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...