rtjy 123 scaled
இலங்கைசெய்திகள்

மீளாய்வு செய்ய தயாராகும் IMF

Share

மீளாய்வு செய்ய தயாராகும் IMF

இலங்கைக்கான விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி பற்றிய முதலாவது மீளாய்வு கூட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அன்றைய தினம் முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை கொழும்பில் தங்கியிருப்பார்கள்.

நாட்டின் பொருளாதார கொள்கை மற்றும் மறுசீரமைப்புக்காக ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு கடந்த மார்ச் மாதம் 300 கோடி டொலர் விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதியின் கீழ் 48 மாதங்களுக்கான நீண்டகால வேலைத்திட்டத்திற்கு அனுமதியளித்தது.

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தல், கடன் நிலைமையில் இருந்து மீளுதல், வறியவர்கள் மற்றும் எளிதில் பாதிக்கக்கூடியவர்கள் மீதான பொருளாதார அழுத்தங்களை குறைத்தல், நிதி பிரிவின் ஸ்திரத்தன்மைய பாதுகாத்தல், நிர்வாக துறையை பலப்படுத்தல் என்பன நிதி வசதியளிப்பதன் நோக்கமாகும்.

தற்போது நாடு என்ற வகையில் இருதரப்பு கடன் மாத்திரம் செலுத்தப்படுவதில்லை. எனைய அனைத்து கடன்களும் தவணை அடிப்படையில் அரசாங்கம் செலுத்தி வருகிறது.

நாட்டில் 360 கோடி டொலர் வெளிநாட்டு நிதி கையிருப்பு காணப்படுவதாக ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அவிசாவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...