tamilni 375 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திடீரென யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுத்துள்ள மக்கள்!

Share

திடீரென யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுத்துள்ள மக்கள்!

நாட்டில் நேற்று மற்றும் இன்று ஆகிய தினங்கள்(வியாழன்28, மற்றும் வெள்ளி29) விடுமுறை தினங்கள் என்பதாலும், அதனுடன் இணைந்து வார இறுதி நாட்கள் வருவதாலும் நீண்ட விடுமுறை காணப்படுகின்றது.

இந்தநிலையில், இந்த நீண்ட விடுமுறை நாட்களில் பெருமளவான சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்துள்ளனர்.

குறிப்பாக, யாழ்ப்பாணத்தின் நயினாதீவு விகாரைக்கும், நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்திற்கும் இன்று மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகைத் தந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நயினாதீவு நோக்கி பயணிக்கும் மக்கள் குறிகட்டுவானில் பேருந்துகளை நிறுத்திவிட்டு படகு சேவைக்காக நீண்ட நேரம் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட சில படகுகள் இன்று படகு சேவையை மேற்கொண்டாலும் பயணிகளை ஏற்றி இறக்குவதில் பெரும் தாமதமான நிலை காணப்பட்டுள்ளது.

அதிகப்படியான மக்கள் யாழ்ப்பாணம் நயினாதீவு நாக விகாரை, நாக பூசணி அம்மன் ஆலயத்திற்கு பயணம் மேற்கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

குறிப்பாக தமிழ் – சிங்கள மக்கள் இன்றைய பவுர்ணமி நாளில் அம்மனுக்கும் நாகவிகாரைக்கும் வழிபாட்டுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நான்கு லீற்றர் பெற்றோல் வைத்திருந்தவருக்கு 21 நாட்கள் சிறை: நிக்கவரட்டிய நீதிமன்றம் தீர்ப்பு

சட்டவிரோதமான முறையில் நான்கு லீற்றர் பெற்றோலைத் தனது கைவசத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 48 வயதுடைய...

Untitled 1
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் வரியைக் குறையுங்கள்: ஜனாதிபதிக்குச் சஜித் பிரேமதாச அறைகூவல்!

இந்திய அரசாங்கம் அண்மையில் எரிபொருள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்திருப்பதைப் போன்று, இலங்கை அரசாங்கமும் வரிகளைக்...

02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...