tamilnihj scaled
இலங்கைசெய்திகள்

கடனைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் கோரியுள்ள இலங்கை

Share

கடனைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் கோரியுள்ள இலங்கை

கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக பத்திரப்பதிவுதாரர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் நியூயோர்க் நீதிமன்ற நீதிபதியிடம், மேலும் ஐந்து மாத கால அவகாசத்தை இலங்கை கோரியுள்ளது.

தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவே இந்த கூடுதல் அவகாசம் வேண்டும் என்று இலங்கை குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக 2022, ஜூலையில் ஹாமில்டன் ரிசர்வ் நிறுவனம் வழக்கை தாக்கல் செய்தது.

இதன்போது இலங்கை அரசு, அந்த மாதத்தில் செலுத்த வேண்டிய 250 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான டொலர் பத்திரத்தின் முழுப் பணத்தையும் கோரியது.

கடந்த நவம்பரில் இடம்பெற்ற விசாரணையின்போது கடன்களை செலுத்துவதற்காக இலங்கைக்கு காலதாமதம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் அந்த காலதாமதத்தை நீடிக்குமாறு இலங்கை நேற்று இடம்பெற்ற விசாரணையின்போது கோரியுள்ளது.

ஹாமில்டன் ரிசர்வ் நிறுவனம் இலங்கையின் புதிய கோரிக்கையை எதிர்த்தது.கடன் மறுசீரமைப்பு தொடர்பான பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும், இலங்கை அரசு அதனை முன்னெடுக்கவில்லை என்று வங்கி குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...