tamilnihj scaled
இலங்கைசெய்திகள்

கடனைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் கோரியுள்ள இலங்கை

Share

கடனைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் கோரியுள்ள இலங்கை

கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக பத்திரப்பதிவுதாரர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் நியூயோர்க் நீதிமன்ற நீதிபதியிடம், மேலும் ஐந்து மாத கால அவகாசத்தை இலங்கை கோரியுள்ளது.

தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவே இந்த கூடுதல் அவகாசம் வேண்டும் என்று இலங்கை குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக 2022, ஜூலையில் ஹாமில்டன் ரிசர்வ் நிறுவனம் வழக்கை தாக்கல் செய்தது.

இதன்போது இலங்கை அரசு, அந்த மாதத்தில் செலுத்த வேண்டிய 250 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான டொலர் பத்திரத்தின் முழுப் பணத்தையும் கோரியது.

கடந்த நவம்பரில் இடம்பெற்ற விசாரணையின்போது கடன்களை செலுத்துவதற்காக இலங்கைக்கு காலதாமதம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் அந்த காலதாமதத்தை நீடிக்குமாறு இலங்கை நேற்று இடம்பெற்ற விசாரணையின்போது கோரியுள்ளது.

ஹாமில்டன் ரிசர்வ் நிறுவனம் இலங்கையின் புதிய கோரிக்கையை எதிர்த்தது.கடன் மறுசீரமைப்பு தொடர்பான பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும், இலங்கை அரசு அதனை முன்னெடுக்கவில்லை என்று வங்கி குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...