15 22
இலங்கைசெய்திகள்

அநுர ஆட்சியில் 750,000 அரச ஊழியர்களுக்கு ஆபத்து : கவலையில் நாமல்

Share

அநுர ஆட்சியில் 750,000 அரச ஊழியர்களுக்கு ஆபத்து : கவலையில் நாமல்

அரச சேவையை வலுப்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், 750,000 அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புதிய அலுவலகத்தை பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. அரசாங்கம் வெளியிடும் தகவலுக்கமைய, அவர்கள் ஒரு அரசியல் வேட்டைக்குத் தயாராகி வருவது தெளிவாகின்றது.

அரச ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தாலும், அதற்கான திட்டம் என்ன என்பதை அறிவிக்கவில்லை.

அந்த சூழ்நிலையில், அரசியல் பழிவாங்கலுக்குள்ளான அனைவருக்கும் ஆதரவாக நிற்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்தது. அதற்காக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

அரச இயந்திரத்திற்குள் ஏதோ ஒரு வகையான வேட்டை நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. அதில், தொழிற்சங்கத் தலைவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

இந்த அரசாங்கத்தின் திறமையின்மை மக்களுக்கு தெரியவந்துவிட்டது. இந்த அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை. நல்லாட்சி அரசாங்கத்தைப் போலவே அரசியல் அடக்குமுறையைக் கொண்டு வந்து, திருடனைப் பிடித்தோம், சிறைப்படுத்துகிறோம் என கூறி அரசியல் பிரசாரத்தை தொடர அரசாங்கம் இப்போது தயாராகி வருகிறது.

அதேவேளை, ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்களை அரசாங்கம் அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாக நாமல் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடக அடக்குமுறையின் அடுத்த கட்டம் அரசியல் அடக்குமுறை என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் மூலம் நம்மைத் தடுக்க முடியாது என மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Canned Fish 1200px 22 11 06 1000x600 1
செய்திகள்இலங்கை

டின் மீன் வகைகளுக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை...

AA1QtdSx
செய்திகள்உலகம்

தென் கொரியா சியோனானில் பாரிய தீ விபத்து: இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு 129 தீயணைப்பு வீரர்கள் முயற்சி!

தென் கொரியாவின் தென் சங் சியோங் மாகாணம், சியோனான் நகரம், தொங்னாம்-கு, புசியோங்-ம்யோன் பகுதியில் அமைந்துள்ள...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1 1
செய்திகள்இலங்கை

விலை மனுதாரர்களைத் தெரிவு செய்வதில் நடந்த மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என...

fc8354edbbb9260d3534c77dcb0e01de 1200
செய்திகள்உலகம்

வெளிநாட்டு மாணவர் கட்டணத்தில் 6% புதிய வரி:  பிரித்தானியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அதிருப்தி!

வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தின் மீது பிரித்தானிய அரசாங்கத்தால் விதிக்கப்படவுள்ள புதிய வரித் திட்டம் குறித்து,...