25 683aaaf213c5c
இலங்கைசெய்திகள்

புலிகள் மீதான தடை தொடர்பில் இலங்கை அரசின் வர்த்தமானி வெளியானது

Share

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பட்டியலை புதுப்பித்து நேற்று (மே 30) புதிய வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் இந்த “அதி விசேட வர்த்தமானி” (Gazette Extraordinary) அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

புலிகள் மீதான தடை தொடர்பில் இலங்கை அரசின் வர்த்தமானி வெளியானது | Ltte Further Banned In Lanka

இதில் தற்போது 15 அமைப்புகள் மற்றும் 217 தனிப்பட்ட நபர்கள் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. முன்னதாக, கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி வெளியான வர்த்தமானியில் 15 அமைப்புகள் மற்றும் 222 நபர்கள் பட்டியலிடப்பட்டிருந்தனர்.

புதிய பட்டியலில் விடுதலைப்புலிகள் (LTTE), தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (Tamil Rehabilitation Organisation – TRO), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற அமைப்புகள் தொடர்ந்து தடைப்பட்டவையாகவே இருந்து வருகின்றன.

இந்த நடவடிக்கை, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...