16 33
இலங்கைசெய்திகள்

அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Share

அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

நாடாளவிய ரீதியிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் நாளையதினம் புத்தாண்டு கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு சபைகளுக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார தெரிவித்துள்ளார்.

புதிய வருடத்தில் “தூய்மையான இலங்கை” தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் துறையுடன் இணைந்து தூய்மையான இலங்கை திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அதற்கமைவாக அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் முழு அரச சேவை ஊழியர்களின் பங்களிப்புடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறும் பணிகளுக்கு சமமாக தமது பணியிடங்களில் பணிகளை ஆரம்பிக்க வேண்டுமென பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

தூய்மையான இலங்கை நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடங்கும் தேசிய நிகழ்வை அனைத்து அரசு மற்றும் தனியார் இலத்திரனியல் அலைவரிசைகள் ஊடாக ஒலி, ஒளிபரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களும் அதனை காணும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் தூய்மையான இலங்கை உறுதிமொழியை நேரலையில் வாசிக்குமாறு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தனது சுற்றறிக்கை மூலம் மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...