tamilnaadi 76 scaled
இலங்கைசெய்திகள்

இரண்டு பிரதான அரச வங்கிகள் பாரிய நெருக்கடியில்

Share

இரண்டு பிரதான அரச வங்கிகள் பாரிய நெருக்கடியில்

இரண்டு பிரதான அரச வங்கிகள் எதிர்நோக்கும் பாரிய நெருக்கடியில் இருந்து அவை மீட்கப்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 5ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ஆற்றிய உரை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த பெப்ரவரிக்குள், நம் நாடு கடந்த ஆண்டு பெப்ரவரியை விட சிறந்த நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு பணவீக்கம் 50.6% ஆக இருந்தது. இன்று அது 6.4% ஆகக் குறைந்துள்ளது. உணவுப் பணவீக்கம் 54.4%. இன்று அது 3.3% ஆக குறைந்துள்ளது.

அப்போது ஒரு டொலரின் மதிப்பு 362 ரூபா. இன்று 314 ரூபா. சுதந்திரத்திற்குப் பின்னரான 76 வருடங்களில் இலங்கையானது முதன்மையான வரவு செலவுத் திட்ட உபரியைப் பெறுவது இது 6வது தடவையாகும்.

மேலும், 2023 ஆம் ஆண்டில் 28% ஆக இருந்த வட்டி விகிதம், வணிக அல்லது தனியார், வங்கி அமைப்பு மூலம் நாம் அனைவரும் எதிர்கொள்ளும் வட்டி விகிதம் இப்போது குறைந்துள்ளது. இது இன்று 12% வீதத்தில் பராமரிக்கப்படுகிறது.

சுற்றுலா வணிகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. அத்துடன் நமது நாட்டின் விவசாய வளர்ச்சி 3.9% அதிகரித்துள்ளது என்பதை அனைத்து புள்ளிவிபரங்களும் ஒப்புக்கொள்கின்றன.

அது ஏன்? அதற்கு அளிக்கப்பட்ட ஆதரவும் வழிகாட்டுதலும். அதற்காக வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் மற்றும் ஆதரவின் காரணமாக, விவசாயிகள் இந்த சக்திவாய்ந்த வளர்ச்சியை அடைய முடிந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
11 8
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி: சந்தை ஆய்வாளர்கள் தகவல்!

கடந்த வாரம் ஈரான் – இஸ்ரேல் பிராந்திய மோதல்களினால் உச்சத்தை எட்டியிருந்த தங்கத்தின் விலையானது, இந்த...

10 8
செய்திகள்உலகம்

ஈரானுடனான போரில் முழுமையான வெற்றி பெறும் வரை பின்வாங்க மாட்டோம்: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை!

ஈரானுடனான தற்போதைய இராணுவ மோதலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான எந்தவொரு தூரத்திற்கும் செல்ல அமெரிக்கா தயாராக...

09 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக வலைத்தள காணொளி மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான சாரதி: மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் கைது!

பொது வீதிகளில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், விபத்துக்களைத் தூண்டும் விதமாகவும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய...

08 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நடப்பாண்டின் முதல் இரு மாதங்களில் 422 பேர் சாலை விபத்துக்களில் பலி!

இலங்கையில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த மார்ச் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள...