இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிறுமிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

Share
24 66ad8f61c19c7
Share

இலங்கையில் சிறுமிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

அனுராதபுரத்தில் கடந்த இரண்டு நாட்களில் 5 சிறுமிகள் வன்புணர்வு மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.

30 மற்றும் 31ஆம் திகதிகளில் இடம்பெற்ற இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

காலதீவுல்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 14 வயதுடைய சிறுமியுடன் காதல் உறவில் ஈடுபட்டு சிறுமியை ஏமாற்றி வன்புணர்வு செய்த 25 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவில்16 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமியின் தந்தையின் 39 வயதுடைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிரதேசத்தை விட்டு தப்பியோடிய 50 வயதுடைய கொத்தனார் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 17 வயது சிறுவன் பன்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 14 வயதுடைய சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய, அப்பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் உட்பட மூவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் திறப்பன பிரதேசத்தில் 16 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 24 வயதான நீர் வழங்கல் சபையின் பொறியியலாளர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகங்களின் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...