images 1 1
இலங்கைசெய்திகள்

வரலாற்றில் இடம்பிடிக்கும் ஜனாதிபதி அநுர

Share

வரலாற்றில் இடம்பிடிக்கும் ஜனாதிபதி அநுர

இலங்கையில் மிகக் குறுகிய காலத்தில் அதிக கடன் வாங்கிய தலைவராக தற்போதைய ஜனாதிபத அநுர குமார திஸாநாயக்க வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் என்று சர்வஜன சக்தி கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

திலித் ஜயவீர தலைமையில் கணேமுல்ல நகரில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் முன்வைக்கும் வேலைத்திட்டத்தில் எந்த மூலோபாயமும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நான் தற்போதைய ஜனாதிபதியிடம் அன்றும் சுட்டிக்காட்டினேன். அவர் முன்வைக்கும் எந்த திட்டத்திலும் எவ்வித மூலோபாயமும் இல்லை.

இலங்கையில் மிகக் குறுகிய காலத்தில் அதிக கடன் வாங்கியவராக தற்போது அவர் சரித்திரத்தில் இடம்பிடிக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்க்கட்சியை எங்களிடம் கொடுங்கள் எனவும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...