5 13
இலங்கைசெய்திகள்

மாற்றுத் தெரிவை நாடும் மக்கள்! முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் எடுத்துள்ள முடிவு

Share

மாற்றுத் தெரிவை நாடும் மக்கள்! முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் எடுத்துள்ள முடிவு

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் புதிய மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கின்ற நிலையில் அதனை தான் மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த அரசாங்கத்துடன் இணைந்து தேசத்தை மீளக் கட்டியெழுப்ப தன்னால் இயன்ற உதவிகளை வழங்கியதாகவும், ஆனால் பொதுமக்களுக்கு மாற்றம் தேவை என்பது புலனாகிறது என்றும் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரசாங்கத்திலும் நாடாளுமன்றத்திலும் மாற்றத்திற்கான மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கின்றோம். இதன்படி பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.

அதற்கு பதிலாக, தன்னை முன்னர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்த அநுராதபுர மக்களுக்கு சேவை செய்வதில் பணியாற்றுவேன்.

எவ்வாறெனினும், எதிர்காலத்தில் தேசத்திற்கு தேவைப்படும் போதெல்லாம் தனது நிபந்தனையற்ற உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
12 1
உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் திடீரென மேற்கூரையில் விழுந்த விமானம்

அமெரிக்காவின் (USA) கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக...

13 1
இலங்கைசெய்திகள்

தனியார் பேருந்து சாரதிகளுக்கு ஓய்வூதியம் : அமைச்சர் அதிரடி அறிவிப்பு

அரச பேருந்து சாரதிகளைப் போலவே, தனியார் பேருந்து சாரதிகளுக்கும் ஓய்வூதியம் வழங்கும் சமூகப் பாதுகாப்பு முறையை...

11 1
உலகம்செய்திகள்

பற்றி எரியும் நாடுகள் – இஸ்ரேல் மீது வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் – சூளுரைக்கும் ஈரான்

இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது நேற்று...

6 5
உலகம்செய்திகள்

அடுத்தடுத்து காவு வாங்கும் இஸ்ரேல் : பலியான புதிய தலை – பின்வாங்குமா ஈரான்

மத்திய தெஹ்ரானில் (Tehran) இலக்கு வைக்கப்பட்டு நடாத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், ஈரானின் முக்கிய தளபதி மேஜர்...