5 13
இலங்கைசெய்திகள்

மாற்றுத் தெரிவை நாடும் மக்கள்! முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் எடுத்துள்ள முடிவு

Share

மாற்றுத் தெரிவை நாடும் மக்கள்! முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் எடுத்துள்ள முடிவு

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் புதிய மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கின்ற நிலையில் அதனை தான் மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த அரசாங்கத்துடன் இணைந்து தேசத்தை மீளக் கட்டியெழுப்ப தன்னால் இயன்ற உதவிகளை வழங்கியதாகவும், ஆனால் பொதுமக்களுக்கு மாற்றம் தேவை என்பது புலனாகிறது என்றும் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரசாங்கத்திலும் நாடாளுமன்றத்திலும் மாற்றத்திற்கான மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கின்றோம். இதன்படி பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.

அதற்கு பதிலாக, தன்னை முன்னர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்த அநுராதபுர மக்களுக்கு சேவை செய்வதில் பணியாற்றுவேன்.

எவ்வாறெனினும், எதிர்காலத்தில் தேசத்திற்கு தேவைப்படும் போதெல்லாம் தனது நிபந்தனையற்ற உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
yyyyy
உலகம்செய்திகள்

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டமான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “(அமெரிக்கா) மோதலில்...

5 4
இலங்கைசெய்திகள்

நீதியரசர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதிகள்!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை, ஒப்புதல் அளித்துள்ளது....

4 5
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரானின் மேலும் ஒரு புலனாய்வு தலைவரும் பலி

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி நேற்று(15) தெஹ்ரானில் உள்ள அவர்களின்...

3 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவில் கடும் குழப்ப நிலை

கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, புதியதாக தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர...