5 13
இலங்கைசெய்திகள்

மாற்றுத் தெரிவை நாடும் மக்கள்! முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் எடுத்துள்ள முடிவு

Share

மாற்றுத் தெரிவை நாடும் மக்கள்! முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் எடுத்துள்ள முடிவு

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் புதிய மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கின்ற நிலையில் அதனை தான் மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த அரசாங்கத்துடன் இணைந்து தேசத்தை மீளக் கட்டியெழுப்ப தன்னால் இயன்ற உதவிகளை வழங்கியதாகவும், ஆனால் பொதுமக்களுக்கு மாற்றம் தேவை என்பது புலனாகிறது என்றும் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரசாங்கத்திலும் நாடாளுமன்றத்திலும் மாற்றத்திற்கான மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கின்றோம். இதன்படி பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.

அதற்கு பதிலாக, தன்னை முன்னர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்த அநுராதபுர மக்களுக்கு சேவை செய்வதில் பணியாற்றுவேன்.

எவ்வாறெனினும், எதிர்காலத்தில் தேசத்திற்கு தேவைப்படும் போதெல்லாம் தனது நிபந்தனையற்ற உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
03 7
உலகம்செய்திகள்

ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டன!

சவூதி அரேபியாவின் ஷைபா (Shaybah) எண்ணெய் வயலை இலக்கு வைத்து ஏவப்பட்ட 6 ஆளில்லா வானூர்திகள்...

02 6
செய்திகள்உலகம்

ஈராக் எண்ணெய் களஞ்சியத்தின் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்!

தெற்கு ஈராக்கில் அமைந்துள்ள எண்ணெய் களஞ்சியமொன்றின் மீது ஆளில்லா வானூர்தி (Drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத்...

28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...