23 4
இலங்கைசெய்திகள்

அரசியலில் களமிறங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்ஷான்! ரஞ்சனுடன் இணைவு

Share

அரசியலில் களமிறங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்ஷான்! ரஞ்சனுடன் இணைவு

நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவின் தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய ஜனநாயகக் குரல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சி கொழும்பில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சரான ரஞ்சன்‌ ராமநாயக்க செயற்படுவதோடு, தேசிய அமைப்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கட்சியானது எதிர்வரும் பொதுத் தேர்தலில் மைக் சின்னத்தில் களமிறங்கவுள்ளனர்.

கட்சியின் வேட்பாளர்களாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷானும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மேலும் பல பிரபலங்கள் கட்சிக்குள் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, எனது குடியுரிமை நீக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சீட்டு கிடைக்கப்பெற்றது. ஆகவே என்னால் தேர்தலில் வாக்களிக்கவும் ,போட்டியிடவும் முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...