25 682d7f50bffcb
இலங்கைசெய்திகள்

தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்குவலை : கடலுக்கு செல்வதை நிறுத்திய சிறு தொழிலாளிகள்

Share

யாழ் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்குவலையால் அதிகளவான கடற்றொழிலாளர்கள் தொழிலை இழந்துள்ளனர்.

சட்டவிரோத சுருக்குவலை தொழிலுக்கு நாளாந்தம் அதிகளவான கடற்றொழில் படகுகள் சென்று ஐம்பதாயிரம் கிலோவிற்கும் அதிகளவான மீன்களை பிடித்து வருவதால் சிறு தொழிலாளிகள் தங்களின் வருமானத்தை இழந்துள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத சுருக்குவலை கடற்றொழிலில் அதிகளவான மீன்கள் பிடிபடுவதால் சிறு தொழிலாளிகள் பிடிக்கும் மீன்களின் விலை சந்தைகளில் குறைந்துள்ளது.

இதனால் அதிகளவான கடற்றொழிலாளர்களின் படகுகள் கடலுக்கு செல்வதை நிறுத்தியுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது

இந்த சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவோரை விளக்கமறியலில் வைப்பதுடன் அவர்களின் படகுகளும் தடுத்து வைக்கப்படுகின்றது ஆனால் வடமராட்சி கிழக்கில் அவ்வாறு இல்லை, கைது செய்யப்படுபவர்கள் உடன் விடுவிக்கப்படுவதால் தமது கடல் வளம் அழிந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுத்து சட்டவிரோத கடற்றொழில் முறையை முற்றாக நிறுத்தி தமது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென அப்பகுதி கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...