25 682d7f50bffcb
இலங்கைசெய்திகள்

தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்குவலை : கடலுக்கு செல்வதை நிறுத்திய சிறு தொழிலாளிகள்

Share

யாழ் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்குவலையால் அதிகளவான கடற்றொழிலாளர்கள் தொழிலை இழந்துள்ளனர்.

சட்டவிரோத சுருக்குவலை தொழிலுக்கு நாளாந்தம் அதிகளவான கடற்றொழில் படகுகள் சென்று ஐம்பதாயிரம் கிலோவிற்கும் அதிகளவான மீன்களை பிடித்து வருவதால் சிறு தொழிலாளிகள் தங்களின் வருமானத்தை இழந்துள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத சுருக்குவலை கடற்றொழிலில் அதிகளவான மீன்கள் பிடிபடுவதால் சிறு தொழிலாளிகள் பிடிக்கும் மீன்களின் விலை சந்தைகளில் குறைந்துள்ளது.

இதனால் அதிகளவான கடற்றொழிலாளர்களின் படகுகள் கடலுக்கு செல்வதை நிறுத்தியுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது

இந்த சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவோரை விளக்கமறியலில் வைப்பதுடன் அவர்களின் படகுகளும் தடுத்து வைக்கப்படுகின்றது ஆனால் வடமராட்சி கிழக்கில் அவ்வாறு இல்லை, கைது செய்யப்படுபவர்கள் உடன் விடுவிக்கப்படுவதால் தமது கடல் வளம் அழிந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுத்து சட்டவிரோத கடற்றொழில் முறையை முற்றாக நிறுத்தி தமது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென அப்பகுதி கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
10 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையர்களின் அதீத சீனிப் பயன்பாடு: ஈறு நோய் பாதிப்பு அதிகரிப்பு – எச்சரிக்கை விடுத்த வைத்தியர்!

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவருக்கு ஈறு தொடர்பான நோய்கள் இருப்பதாக வாய் சுகாதார விசேட...

09 6
செய்திகள்இலங்கை

பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு: பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பேரிடர் நிலைகளின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...

08 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகத்தை எளிமைப்படுத்தும் புதிய செயலி: யாழ். இந்துக் கல்லூரி மாணவரின் புத்தாக்கம்!

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சவால்களைத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர...

01 6
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் மற்றும் அவரது துணைவர் சடலமாக மீட்பு: காவல்துறை விசாரணை!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், ஹேர்ன்ஸ் ஓக் (Hernes Oak) எனும் கிராமப்புறப்...