24 66a4532c289ce
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபாய்!

Share

இலங்கைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபாய்!

தாவரவியல் பூங்காக்கள் மூலம் 2024 ஜூன் மாதம் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் எச்.ஜி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2022ஆம் ஆண்டு வருமானம் 420.02 மில்லியன் ரூபாவாகவும், 2023ஆம் ஆண்டு வருமானம் 901.1 மில்லியன் ரூபாவாகவும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 2024 வரை தாவரவியல் பூங்காவை பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 965,468 ஆகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 183,674 ஆகவும் பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது 96% அதிகரிப்பாகும் என கூறியுள்ளார்.

இதேவேளை 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவை பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முறையே 1,773,048 – 1,925,129 வரையிலான எண்ணிக்கையாக பதிவானதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முறையே 103,322 – 227,729 வரையில் காணப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மறுசீரமைப்பு: தனியார்மயமாக்கல் குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை!

தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கு (SriLankan Airlines) புத்துயிர் அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை...

world 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பான புத்தாண்டு கொண்டாட்டம்: விபத்துக்கள் குறித்து அதிகாரிகளின் எச்சரிக்கை!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சாலைப் போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் பட்டாசு தொடர்பான...

world 27
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரண்டு நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய...

world 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை முதலீட்டுச் சபையின் பதில் தலைவராக டாக்டர் சுலக்ஷனா ஜயவர்தன நியமனம்!

இலங்கை முதலீட்டுச் சபையின் (Board of Investment – BOI) பதில் தலைவராக டாக்டர் சுலக்ஷனா...