24 66a4532c289ce
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபாய்!

Share

இலங்கைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபாய்!

தாவரவியல் பூங்காக்கள் மூலம் 2024 ஜூன் மாதம் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் எச்.ஜி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2022ஆம் ஆண்டு வருமானம் 420.02 மில்லியன் ரூபாவாகவும், 2023ஆம் ஆண்டு வருமானம் 901.1 மில்லியன் ரூபாவாகவும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 2024 வரை தாவரவியல் பூங்காவை பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 965,468 ஆகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 183,674 ஆகவும் பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது 96% அதிகரிப்பாகும் என கூறியுள்ளார்.

இதேவேளை 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவை பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முறையே 1,773,048 – 1,925,129 வரையிலான எண்ணிக்கையாக பதிவானதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முறையே 103,322 – 227,729 வரையில் காணப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...