19 19
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள மின்சக்தி அமைச்சர்

Share

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள மின்சக்தி அமைச்சர்

மின்சாரக் கட்டணம் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணம் சுமார் 20% குறைக்கப்பட வேண்டுமென்ற பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரையை அமைச்சு ஏற்றுக் கொள்வதாகவும், இதன்படி மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நேற்று(17) நள்ளிரவு 12:00 மணி முதல் குறைக்கப்பட்ட மின்சாரக் கட்டணம் நடைமுறைக்கு வரும் என்றும் அமைச்சர் விசேட அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம் நாட்டின் அனைத்து மக்களும், குறிப்பாக ஹோட்டல் துறையினரும், தொழிலதிபர்களும் பெரிதும் பயனடைவார்கள் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரக் கட்டணத்தில் ஏற்பட்டுள்ள இந்த குறிப்பிடத்தக்க குறைப்பு மக்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என்று தாம் நம்புவதாகவும் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் நிச்சயம் கவனத்திற் கொள்ளப்பட்டு செயற்படுத்தப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தித் துறை அமச்சர் குமார ஜெயக்கொடி(Kumara Jayakody) தெரிவித்துள்ளார்.

மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிச்சயம் கருத்திற் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

படிப்படியாக மின் கட்டணத்தை குறைத்து எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் 30 சதவீத மின் கட்டண குறைப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின் கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. எனினும் இதுதொடர்பான தீர்மானம் சம்பந்தப்பட்ட அமைச்சினால் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...