tamilnaadi 76 scaled
இலங்கைசெய்திகள்

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியதன் பின் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு

Share

க.பொ.த சாதாரணதரத்தின் பின் பரீட்சையென்றை எதிர்கொள்வதன் ஊடாக அரச பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும் முறை தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியதன் பின், பரீட்சை ஒன்றை எதிர்கொள்வதன் ஊடாக அரச பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்படவுள்ளது.

கல்வி கொள்கை கட்டமைப்பிற்குள் இந்த விடயம் காணப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் நடைபெறும் கல்வி தொடர்பான கண்காணிப்பு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எட்டப்படும்.

தனியார் பல்கலைக்கழகங்கள் இவ்வாறான நடைமுறைகளை பின்பற்றுகின்றன. அதனூடாக மாணவர்களுக்கு கல்விக்கான கால எல்லையை முகாமைத்துவம் செய்து கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...