tamilnaadi 76 scaled
இலங்கைசெய்திகள்

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியதன் பின் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு

Share

க.பொ.த சாதாரணதரத்தின் பின் பரீட்சையென்றை எதிர்கொள்வதன் ஊடாக அரச பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும் முறை தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியதன் பின், பரீட்சை ஒன்றை எதிர்கொள்வதன் ஊடாக அரச பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்படவுள்ளது.

கல்வி கொள்கை கட்டமைப்பிற்குள் இந்த விடயம் காணப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் நடைபெறும் கல்வி தொடர்பான கண்காணிப்பு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எட்டப்படும்.

தனியார் பல்கலைக்கழகங்கள் இவ்வாறான நடைமுறைகளை பின்பற்றுகின்றன. அதனூடாக மாணவர்களுக்கு கல்விக்கான கால எல்லையை முகாமைத்துவம் செய்து கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...

Untitled 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநர் கைது: சாரதி அனுமதிப்பத்திரமும் இல்லை!

சமூக ஊடகங்களில் வைரலாகிய காணொளி காட்சிகளின் அடிப்படையில், வீதி சமிக்ஞைகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு படுகொலை: கொலையாளிகளுக்கு கடும் தண்டனை கோரி பாரிய மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கொள்ளை மற்றும் கொடூரக் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...