உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் இலங்கை மக்கள்: அதிர்ச்சி தகவல்
இலங்கைசெய்திகள்

உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் இலங்கை மக்கள்: அதிர்ச்சி தகவல்

Share

உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் இலங்கை மக்கள்: அதிர்ச்சி தகவல்

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 34 சதவீதமானோர், உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த விடயம் குறித்து “லெர்ன் ஏசியா இன்ஸ்டிட்யூட்” நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 5.97 மில்லியன் என்றும், அதில் 32 சதவீதமானோர் அதாவது 1.9 மில்லியன் குடியிருப்பாளர்களில் 7.9 மில்லியன் பேர் உணவு கொள்வனவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நகைகள் மட்டுமின்றி மரச்சாமான்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள் அல்லது நாற்காலிகள், மேசைகள், படுக்கைகள் போன்றவற்றையும் மக்கள் விற்பனை செய்து உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு 10 குடும்பங்களில் 07 குடும்பங்களின் இருவருக்கு உணவு வழங்குவது மட்டுப்படுத்துவதாக உலக உணவுத் திட்டம் வெளிப்படுத்தியுள்ளது.

அத்தோடு ஒவ்வொரு 10 குடும்பங்களிலும் 08 குடும்பங்கள் ஈட்டும் தற்போதைய வருமானம், பொருளாதார சிக்கல் நிலைக்கு முன்னர் ஈட்டிய வருமானத்தை விட குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...