8 7 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தகவல்

Share

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தகவல்

இலங்கை தனது பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை கால அட்டவணைக்குள் முடிக்க எதிர்பார்த்துள்ள நிலையில், இரண்டாவது தவணை நிதியுதவியை பெறுவதற்கான பாதையில் உள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் இதனை தெரிவித்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் நிதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சுப்ரமணியன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்டபடி சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை நிறைவு செய்து, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை பெறும் பாதையில் இலங்கை பிரவேசித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இரண்டாவது தவணையை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையிடமிருந்து அனுமதி பெறப்படும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...