8 7 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தகவல்

Share

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தகவல்

இலங்கை தனது பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை கால அட்டவணைக்குள் முடிக்க எதிர்பார்த்துள்ள நிலையில், இரண்டாவது தவணை நிதியுதவியை பெறுவதற்கான பாதையில் உள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் இதனை தெரிவித்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் நிதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சுப்ரமணியன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்டபடி சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை நிறைவு செய்து, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை பெறும் பாதையில் இலங்கை பிரவேசித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இரண்டாவது தவணையை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையிடமிருந்து அனுமதி பெறப்படும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

Share
தொடர்புடையது
07 8
உலகம்செய்திகள்

ஈரான் போருக்கு பிரிட்டனின் உதவி தேவையில்லை: பிரதமர் கீர் ஸ்டார்மரை விமர்சித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போரில், பிரிட்டனின் ஆதரவு...

06 7
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு அவசரக்கால ஆயுத விற்பனை: அமெரிக்க காங்கிரஸ் அனுமதியைத் தவிர்த்த ட்ரம்ப் நிர்வாகம்

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இஸ்ரேலுக்கு சுமார்...

05 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாத்தறை சிறைச்சாலையில் கைதிகள் இடமாற்றம்: பதற்றமான சூழலால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

மாத்தறை சிறைச்சாலையிலிருந்து ஒன்பது கைதிகள் அங்கிருந்த அங்கிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாத்தறை சிறைச்சாலையினுள்...

04 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளங்கன் வைத்தியசாலை துஷ்பிரயோகச் சம்பவம்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போராட்டத்திற்கு தடை!

டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும்...