வேலைக்காக காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
இலங்கைசெய்திகள்

வேலைக்காக காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

Share

வேலைக்காக காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

ஹோட்டல் முகாமைத்துவத் துறையில் 13000 பயிற்சியாளர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கப்பல் நிறுவனங்கள், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுடன் உடன்படிக்கைக்கு வந்துள்ளன.

நிறுவனப் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த வாரம் இலங்கைக்கு வந்து அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் தமது பயணிகள் கப்பல்களில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர்.

ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சிக்காக நாட்டில் உள்ள வசதிகள் குறித்து திருப்தியடைவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயிற்சிக்கான பாடத்திட்டமும் அந்த நிறுவனங்களால் வழங்கப்பட உள்ளது. அதற்கமைய, அடுத்த சில மாதங்களுக்குள் பயிற்சிக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள அமைச்சு தயாராகி வருகிறது.

இது தொடர்பாக, கப்பல் நிறுவனங்களுக்கும் அமைச்சகத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கையெழுத்திடப்பட உள்ளது.

இதேவேளை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இலக்காக கொண்டு தொழிற்பயிற்சி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பயிற்சி நெறிகளில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...