2 8
இலங்கைசெய்திகள்

ராஜபக்சவினரைப் போன்ற முடிவு! அநுர அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

ராஜபக்சவினரைப் போன்ற முடிவு! அநுர அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ராஜபக்சவினர் போன்று நினைத்த பிரகாரம் அநுர(Anura Kumara Dissanayaka) தரப்பு செயற்பட்டால் நாடு வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாமல் போகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க(Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்திக்கு அரசாங்கம் செய்த அனுபவம் இல்லை என்பது அவர்களின் கடந்த ஒரு மாதகால நடவடிக்கைகளில் இருந்து தெரிந்துகொள்ள முடியும்.

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் இன்னும் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு விமர்சன அரசியல் செய்வது போன்றே தற்போது செயற்பட்டு வருகிறது.

நாட்டை நிர்வகிக்கும் அவர்களுக்கு ஒரு முறையான வேலைத்திட்டம் இருக்க வேண்டும். நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு பயணப்பாதை இருக்க வேண்டும். ஆனால் இதுவரை அவர்கள் அவ்வாறான எந்த வேலைத்திட்டத்தையும் நாட்டுக்கு முன்வைத்ததில்லை. அவர்களிடம் அனுபவம் இல்லாமையே இதற்கு காரணமாகும்.

எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் காரணமாக படிப்படியாக அபிவிருத்தியடைந்து வந்தது. முறையான வேலைத்திட்டம் இருந்தமையாலே அவ்வாறு செய்ய முடிந்தது.

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...