tamilnaadi 41 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறும் வல்லுநர்கள்: பாரதூரமான நிலை

Share

தொழில்சார் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது புதிய விடயம் அல்ல. ஆனால் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரதூரமான நிலைமை ஏற்படலாம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாடு தற்போது பொருளாதார ரீதியாக சாதகமான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய நெருக்கடி தற்காலிகமானது, சரியான பாதையில் சென்றால் இதனை வென்றிட முடியும்.

பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு மாத்திரம் ஏற்படவில்லை. உலகின் மற்றைய நாடுகளைப் போலவே நாமும் சரிந்தோம். ஆனால் உலகின் மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நாம் விரைவாக மீட்சிபெற்றோம்.

எங்களின் கஷ்டங்கள் அனைத்தும் விரைவில் தீர்ந்துவிடவில்லை. இதற்கு சிறிது காலம் எடுத்தாலும், தற்போது பொருளாதாரம் சாதகமாக இருப்பதற்குத் தேவையான சூழலை உருவாக்கியுள்ளோம்.

ஒருவர் மீது ஒருவர் விரல் நீட்டுவது நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வழியாக அமையாது. இது ஒரு தற்காலிக நிலைமை. எதிர்காலத்தில், இழந்த நம்பிக்கைகள் அல்லது நன்மைகளை மீண்டும் பெறுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...