2 7
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Share

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

பொருளாதார கொள்கைகளை மாற்றினால் இலங்கை மீண்டும் பாதாளத்தில் விழும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரிப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்லவில் நேற்று(04) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,” பொருளாதாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை மாற்றினால் நாடு மீண்டும் பாதாளத்தில் விழும் என சர்வதேச நாணய நிதியம் கருதுகின்றது.

நாட்டிற்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய பீட்டர் ப்ரூவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்ததாக கூறினார்.

அரச வருவாயை அதிகரிப்பது, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பது குறித்து மதிப்பீடு செய்யப்படுகின்றது.

இந்நிலையில் பொருளாதாரம் தொடர்பில் சிலர் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.”என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...