tamilni 551 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வெளிநாட்டவர்கள் : நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள்

Share

இலங்கையில் வெளிநாட்டவர்கள் : நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள்

நாட்டை விட்டு அதிக அளவிலான ஹோட்டல் ஊழியர்கள் வெளியேறுவதால் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நட்சத்திர வகுப்பு ஹோட்டல்களை முன்னெடுப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை முதலீட்டுச் சபை ஏற்கனவே ஹோட்டல் நிர்வாகம் தெரியப்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்ட 2000க்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிர்வாகம் முதல் சமையல் அறைகள் வரை அனைத்து துறைகளிலும் பணி வெற்றிடங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளன.

நட்சத்திர ஹோட்டல்களில் பயிற்சி பெற்ற பலர் வெளிநாடு ஹோட்டல்களில் வேலைக்குச் செல்வதாலும், ஹோட்டல் பாடசாலை பயிற்சி பெற்ற பலர் வெளிநாட்டு ஹோட்டல்களில் வேலை தேடுவதாலும் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான உணவு மற்றும் குளிர்பான சேவைகளை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் நிர்வாகிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்த நேரத்தில், நட்சத்திர வகுப்பு ஹோட்டல்களின் வசதிகள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஹோட்டல் துறையில் உள்ள பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....