tamilnid scaled
இலங்கைசெய்திகள்

இரு மடங்காக அதிகரித்த 100 ரூபாவின் பெறுமதி

Share

இரு மடங்காக அதிகரித்த 100 ரூபாவின் பெறுமதி

2021ஆம் ஆண்டில் நீங்கள் 100 ரூபா பெறுமதியுடை பொருள் ஒன்றை கொள்வனவு செய்திருந்தால் அந்த பொருளின் விலை தற்போது 202 ரூபாவாக இருக்கும் என சிரேஷ்ட விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டினுடைய பணவீக்கம் குறைந்திருக்கின்றது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார். 2022ஆம் ஆண்டு 7.8 வீதத்தால் எங்களுடைய பொருளாதாரம் சுருங்கியது. வரலாற்றில் ஒரு நாளும் அவ்வாறு எங்களுடைய பொருளாதாரம் சுருங்கியது இல்லை.

கடந்த வருடம் கூட 3.6 வீதத்தால் பொருளாதாரம் சுருங்கியிருந்தது. ஆனால் இந்த வருடம் பொருளாதாரம் வளர்ச்சியடையும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. பணவீக்கத்தை எடுத்துப் பார்த்தால் 2021ஆம் ஆண்டு 100ஆக இருந்தது தற்போது 202 ஆக இருக்கின்றது.

அதாவது, 2021ஆம் ஆண்டில் நீங்கள் 100 ரூபாவுக்கு பொருட்கள் கொள்வனவு செய்திருந்தால் அது தற்போது 202 ரூபா பெறுமதியாக இருக்கும். ஆனால் மக்களுடைய வருமானம் அதிகரிக்கவில்லை. கூலித் தொழிலாளர்களை எடுத்துப் பார்த்தால் அவர்களுடைய மாதாந்த வருமானம் குறைந்திருக்கின்றது.

அவர்களுக்கான வேலை நாட்கள் இப்போது இல்லை. இப்போது நாங்கள் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கின்றோம். மக்களுடைய வருமானத்தில் வரி ஈட்டுவது சாத்தியப்படாது. செல்வந்தர்களின் சொத்தில் இருந்து வரியை எடுத்தால் தான் நாங்கள் நாட்டுக்கான முதலீடுகள் அனைத்தையும் செய்யக் கூடியதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...