tamilni 303 scaled
இலங்கைசெய்திகள்

விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள விதிகள்…!

Share

விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள விதிகள்…!

நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு தொடர்பில் நிதியியல் சேவை வழங்குனர்களால் பின்பற்றப்பட வேண்டிய புதிய ஒழுங்கு விதிகள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 மாதகாலத்துக்குள் இந்த புதிய ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு ஒழுங்கு விதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 9 ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற அனைத்து நிதியியல் சேவை வழங்குனர்களுக்கும் இவ்வொழுங்குவிதிகள் ஏற்புடையதாக இருக்கும்.

இதனூடாக வங்கித்தொழில் சட்டம், நிதித்தொழில் சட்டம் மற்றும் நிதிக்குத்தகைக்கு விடுதல் சட்டம் என்பவற்றின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஒழுங்கு விதிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக வகுக்கப்பட்டுள்ளன.

ஒழுங்குபடுத்தப்படும் நிதியியல் நிறுவனங்களின் நிதியியல் உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கையாளும் தனிநபர்களும் வியாபாரங்களும் மேம்படுத்தப்பட்ட வகையில் நியாயமாகவும், வெளிப்படையான விதத்திலும் நடாத்தப்படுவதுடன் அவர்களது நிதிசார் செயற்பாடுகள் தொடர்பில் மீயுயர் நம்பிக்கையுடன் சிறந்த தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இயலச்செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட கூறுகளை இவ்வொழுங்குவிதிகள் உள்ளடக்கியுள்ளன.

அதுமாத்திரமன்றி டிஜிட்டல் நிதிச்சேவைகள், வாடிக்கையாளர் தரவுப்பாதுகாப்பு மற்றும் விசேட தேவையுடைய வாடிக்கையாளர்களின் நிதியியல் தேவைப்பாடுகள் என்பன தொடர்பான நவீன நடவடிக்கைகளும் இவ்வொழுங்கு விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் மத்திய வங்கியின் பிணக்குத்தீர்த்தல் பொறிமுறைக்கு மாற்றீடாக, குறைநிரப்புச்செய்யப்பட்ட உள்ளக முறைப்பாட்டுக்கையாள்கை பொறிமுறையையும் இந்த ஒழுங்குவிதிகள் பிரேரிக்கின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...