1717734754 ku 2
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கரம் – 10 மாதங்களில் 500 பேர் படுகொலை

Share

இலங்கையை உலுக்கிய பயங்கரம் – 10 மாதங்களில் 500 பேர் படுகொலை

இலங்கையில் கடந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் 500 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பொலிஸ் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குறிப்பிட்ட காலப்பகுதியில் 488 கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் 52 துப்பாக்கிச் சூடு காரணமாக நடந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்காலை, நுகேகொடை, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் எல்பிட்டிய ஆகிய ஐந்து பொலிஸ் பிரிவுகளில் அதிகளவான கொலைகள் பதிவாகியுள்ளன.

தங்காலை பிரதேசத்தில் மாத்திரம் 32 கொலைகள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் 2018 ஆண்டு மற்றும் 2022 ஆண்டிக்கு இடையில் 7,017 படுகொலைகள் பதிவாகியுள்ளன.

இவ்வாறான வன்முறைக் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...