24 664da6bfac05f
இலங்கைசெய்திகள்

சரத் பொன்சேகாவின் எதிர்பாராத நகர்வு: இறுதி யுத்தம் தொடர்பில்

Share

சரத் பொன்சேகாவின் எதிர்பாராத நகர்வு: இறுதி யுத்தம் தொடர்பில்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா (Sarath Fonseka) சிறிலங்கா அதிபர் தேர்தலில் களமிறங்கவுள்ளதாகவும் இறுதி யுத்தம் தொடர்பில் நாவல் ஒன்றை எழுதவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயமானது, ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியின் மூலமாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, அதிபர் தேர்தலில் அவர் களமிறங்கும் போது எந்த எந்த கூட்டணியுடனும் சேராது தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் இரகசிய பேச்சுவார்த்தை ஈடுபட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தனது தேர்தல் பிராச்சாரங்களின் முன்னதாக அவர் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் நாவல் ஒன்றையும் எழுதி வெளியிடவுள்ளார்.

குறித்த நாவலானது, சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக யுத்தத்தின் போது சந்தித்த சிக்கல்கள் மற்றும் அவரின் வகிபாகம் சார்ந்ததாக அமையவுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...