24 664da6bfac05f
இலங்கைசெய்திகள்

சரத் பொன்சேகாவின் எதிர்பாராத நகர்வு: இறுதி யுத்தம் தொடர்பில்

Share

சரத் பொன்சேகாவின் எதிர்பாராத நகர்வு: இறுதி யுத்தம் தொடர்பில்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா (Sarath Fonseka) சிறிலங்கா அதிபர் தேர்தலில் களமிறங்கவுள்ளதாகவும் இறுதி யுத்தம் தொடர்பில் நாவல் ஒன்றை எழுதவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயமானது, ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியின் மூலமாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, அதிபர் தேர்தலில் அவர் களமிறங்கும் போது எந்த எந்த கூட்டணியுடனும் சேராது தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் இரகசிய பேச்சுவார்த்தை ஈடுபட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தனது தேர்தல் பிராச்சாரங்களின் முன்னதாக அவர் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் நாவல் ஒன்றையும் எழுதி வெளியிடவுள்ளார்.

குறித்த நாவலானது, சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக யுத்தத்தின் போது சந்தித்த சிக்கல்கள் மற்றும் அவரின் வகிபாகம் சார்ந்ததாக அமையவுள்ளது.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...