1770558011 Sri Lanka Child Abuse NCPA 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக 4,000-க்கும் மேற்பட்ட வழக்குகள்: தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிக்கை

Share

நாடளாவிய ரீதியில் உள்ள மேல் நீதிமன்றங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் அது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை 4,289 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 1998ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை திருத்தங்களுக்கு அமைய, சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தச் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில் சுமார் 1,683 வழக்குகள் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள் தொடர்பான ஆபாச வெளியீடுகளைப் பரப்புதல், பாலியல் ரீதியான செயற்பாடுகளுக்காகச் சிறுவர்களை வாடகைக்குப் பெறுதல் அல்லது பணியில் அமர்த்துதல் மற்றும் நேரடிப் பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்ற பாரதூரமான குற்றங்கள் தொடர்பாகச் சட்டமா அதிபரினால் இந்தத் குற்றப்பத்திரிகைகள் மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதியைப் பெற்றுத் தரவும் நீதித்துறை ஊடாகத் தீவிரமான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அதிகார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...