மத்திய வங்கி ஆளுநர் விடுத்த வேண்டுகோள்
இலங்கைசெய்திகள்

மத்திய வங்கி ஆளுநர் விடுத்த வேண்டுகோள்

Share

மத்திய வங்கி ஆளுநர் விடுத்த வேண்டுகோள்

அதிகரிக்கும் பணமோசடியை தடுக்கும் நடவடிக்கைகளை கடுமையாக்குமாறு நில வர்த்தக முகவர்களுக்கு(Real estate agents) இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு, அண்மையில் நில வர்த்தக துறைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

குறித்த நிகழ்ச்சி திட்டத்தில் நில வர்த்தக துறையில் பணமோசடியை தடுப்பது மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை தடுப்பது போன்ற பொறுப்புகளை வெற்றிகரமாக நடைமுறை படுத்துவதன் மூலம் பல்வேறான அபாயங்களை குறைக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இங்கு தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைக்காக நிதி புலனாய்வு பிரிவு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுடன் நெருக்கமாக செயற்படுமாறு மத்திய வங்கியின் ஆளுநர் நில வர்த்தக துறையின் பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.

மேலும், நில வர்த்தக துறையில் நிதி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக, அத்துறையின் ஒழுங்குமுறை அதிகாரிகளின் பல பரிந்துரைகளை தீவிரமாக பரிசீலிக்குமாறும் மத்திய வங்கி ஆளுநர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....