2 2
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை

Share

தனது சகோதரன், உறவினர் அல்லது பணியாளர் அதிகாரி என கூறிக்கொண்டு வெளிநாட்டு வேலைக்காக பணம் வசூலிக்கும் எவருக்கும் பணம் வழங்கக்கூடாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

அத்தகைய பண பரிவர்த்தனைக்கு தான் பொறுப்பல்ல என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான எந்தவொரு கொடுக்கல் வாங்கலிலும் தமக்கு தொடர்பில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தும் தொழிலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அல்லது அமைச்சின் ஊழியர்களில் எந்த அதிகாரியும் ஈடுபடவில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக பணம் சேகரிக்கும் கும்பல்கள் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நடவடிக்கைகளை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் தீவிரமாக தலையிட்டு வருகின்றதுடன், மோசடியாளர்களிடம் அமைச்சரின் ஆதரவு இல்லை எனவும் வலியுறுத்தப்படுகிறது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு மாத்திரமே தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்ப முடியும் எனவும், அந்த நிறுவனங்களை மாத்திரம் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...