tamilni 174 scaled
இலங்கைசெய்திகள்

வரவு செலவு திட்டத்தின் பின் பாரம்பரியத்தை மாற்றிய ரணில்

Share

வரவு செலவு திட்டத்தின் பின் பாரம்பரியத்தை மாற்றிய ரணில்

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அதிதிகளுக்கு மதிய விருந்தொன்றை வழங்கினார்.

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் பாரம்பரிய தேநீர் வைபவத்திற்குப் பதிலாக, ஜனாதிபதி விருந்து வழங்கியுள்ளார்.

நேற்று நண்பகல் 12.00 மணிக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகி பிற்பகல் 02.00 மணியுடன் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு நிறைவடைந்தது.

இதையடுத்து மதிய விருந்து வழங்கப்பட்டதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர். எனினும், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவில்லை.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த விருந்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வரவு செலவுத் திட்ட உரையின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரம்பரியமாக தேநீர் விருந்து நடத்தப்படும் ஆனால் இம்முறை பிற்பகல் வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி ஆற்றியதால் மதிய உணவு வழங்கப்பட்டதென கூறப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...