tamilni 174 scaled
இலங்கைசெய்திகள்

வரவு செலவு திட்டத்தின் பின் பாரம்பரியத்தை மாற்றிய ரணில்

Share

வரவு செலவு திட்டத்தின் பின் பாரம்பரியத்தை மாற்றிய ரணில்

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அதிதிகளுக்கு மதிய விருந்தொன்றை வழங்கினார்.

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் பாரம்பரிய தேநீர் வைபவத்திற்குப் பதிலாக, ஜனாதிபதி விருந்து வழங்கியுள்ளார்.

நேற்று நண்பகல் 12.00 மணிக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகி பிற்பகல் 02.00 மணியுடன் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு நிறைவடைந்தது.

இதையடுத்து மதிய விருந்து வழங்கப்பட்டதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர். எனினும், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவில்லை.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த விருந்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வரவு செலவுத் திட்ட உரையின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரம்பரியமாக தேநீர் விருந்து நடத்தப்படும் ஆனால் இம்முறை பிற்பகல் வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி ஆற்றியதால் மதிய உணவு வழங்கப்பட்டதென கூறப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...