rtjy 205 scaled
இலங்கைசெய்திகள்

ரணில் தரப்பின் ஆசை

Share

ரணில் தரப்பின் ஆசை

இலங்கையானது ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் போன்று வர வேண்டும் என்பதே தற்போது பெரும்பாலானவர்களின் நிலைப்பாடாகவுள்ளது.

அவ்வாறெனில் நிச்சயம் நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் போலி செய்திகளைப் பரப்பும் சமூக வலைத்தளங்களையும், இன, மத மோதல்களைத் தூண்டும் சமூக வலைத்தளங்களையும் கட்டுப்படுத்துவதற்கேயன்றி பிரதான ஊடகங்களை முடக்குவதற்கானதல்ல என்றும் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களின் ஊடாக போலி செய்திகள் மிகத் துரிதமாக சமூகமயப்படுத்தப்பட்டு வருகின்றன.அது மாத்திரமின்றி இன மற்றும் மதங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தும் கருத்துக்களும் சமூக வலைத்தளங்களுக்கூடாகவே அதிகளவில் பரப்பப்படுகின்றன.

எனவே இவ்வாறான செய்திகளைப் பரப்பும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த வேண்டியது தேசிய தேவை என்பதுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புசட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும்.

இலங்கையானது சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைப் போன்று வர வேண்டும் என்று இன்று பலரும் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நாடுகளில் சமூக வலைத்தளங்கள் தொடர்பான சட்ட திட்டங்கள் மிகக் கடுமையானவையாகவே உள்ளன. ஆனால் நாம் அந்தளவுக்கு சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கு எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...