tamilni 117 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள உத்தரவு

Share

ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள உத்தரவு

நாட்டில் நிலவிய அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த சகல வீதிகளையும் சீர்செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து நெடுஞ்சாலைத் திட்டங்களையும் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதேவேளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று முதல் கல்விக்காக திறக்கப்படும் என தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வெள்ளத்தினால் சேதமடைந்த பாடசாலைகளின் நிலைமையை ஆராய்ந்து அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பது அதிபர்களிடமே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இரண்டு நாட்களுக்கு மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

தற்போது வழமை நிலைக்கு திரும்பியுள்ளதால் பாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டதாக தென் மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...