11 29
இலங்கைசெய்திகள்

அயல் வீட்டு வளர்ப்பு நாயை சுட்டுக்கொன்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி கைது

Share

அயல் வீட்டு வளர்ப்பு நாயை சுட்டுக்கொன்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி கைது

அயல் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை வான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் ஓய்வுபெற்ற இராணுவக் கப்டன் ஒருவர் கந்தானை காவல்துறை அதிகாரிகள் குழுவினால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நாயை சுட பயன்படுத்திய ஏர் ரைபிளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

கந்தானை பொல் பிட்டிமூகலனை பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ கப்டன் ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவராவார்.

 

நாயின் உரிமையாளர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் ஓய்வுபெற்ற இராணுவ கப்டன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நாய், சந்தேக நபரின் வீட்டின் முன் உள்ள சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.

 

இரவு நேரங்களில் வீட்டின் முன்புறம் உள்ள சாலையில் அடிக்கடி வந்து குரைத்ததால் தூக்கம் கூட வராது என நாய் சுட்டுக் கொல்லப்பட்ட விசாரணையில் அவர் தெரிவித்துள்ளமை தெரியவந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...

image 17
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

MediaFile 14
செய்திகள்இலங்கை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.00 –...

20250719 124156
செய்திகள்இலங்கை

இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு: சுற்றுலா மற்றும் திரைப்படத் திட்டங்களில் ஒத்துழைக்க விஜித ஹேரத் வலியுறுத்தல்!

நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத்...