11 29
இலங்கைசெய்திகள்

அயல் வீட்டு வளர்ப்பு நாயை சுட்டுக்கொன்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி கைது

Share

அயல் வீட்டு வளர்ப்பு நாயை சுட்டுக்கொன்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி கைது

அயல் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை வான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் ஓய்வுபெற்ற இராணுவக் கப்டன் ஒருவர் கந்தானை காவல்துறை அதிகாரிகள் குழுவினால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நாயை சுட பயன்படுத்திய ஏர் ரைபிளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

கந்தானை பொல் பிட்டிமூகலனை பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ கப்டன் ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவராவார்.

 

நாயின் உரிமையாளர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் ஓய்வுபெற்ற இராணுவ கப்டன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நாய், சந்தேக நபரின் வீட்டின் முன் உள்ள சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.

 

இரவு நேரங்களில் வீட்டின் முன்புறம் உள்ள சாலையில் அடிக்கடி வந்து குரைத்ததால் தூக்கம் கூட வராது என நாய் சுட்டுக் கொல்லப்பட்ட விசாரணையில் அவர் தெரிவித்துள்ளமை தெரியவந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...