tamilni 380 scaled
இலங்கைசெய்திகள்

இராணுவ சிப்பாயினால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

Share

இராணுவ சிப்பாயினால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

வாதுவ பிரதேசத்தில் மசாஜ் சென்டர்கள், பேஸ்புக் மற்றும் இணையம் மூலம் அடையாளம் காணப்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து தங்க நகைகளை கொள்ளையடித்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரான இராணுவ சிப்பாயை பொலிஸ் தலைமையகத்தின் போலி அடையாள அட்டை மூலம் அச்சுறுத்தி இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரகம, மில்லனிய பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொட்டாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மசாஜ் நிலையங்கள், பேஸ்புக் மற்றும் இணையத்தளங்களில் இருந்து அடையாளம் காணப்பட்ட பெண்களை வாதுவ, மொரொன்துடுவ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகராக இருப்பதாக போலியான அடையாள அட்டையை காட்டி பெண்களின் தங்க நகைகளை சந்தேக நபர் திருடியதும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரால் களவாடப்பட்ட தங்க நகைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபா, கையடக்கத் தொலைபேசி மற்றும் போலி பொலிஸ் அடையாள அட்டை என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...