30 7
இலங்கைசெய்திகள்

இலங்கை நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமானிகளுக்கு இடையில் முறுகல்

Share

இலங்கை நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமானிகளுக்கு இடையில் முறுகல்

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை நோக்கி சென்ற விமானத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த மாதம் 21ஆம் திகதி பிரதான விமானிக்கும் துணை விமானிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனன.

அதற்கமைய சிவில் போக்குவரத்து விதிகளின்படி விசாணைகள் இடம்பெறுவதுடன் பிரதான விமானி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

எயார்பஸ்-330 ரக UL 607 விமானம் சிட்னியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது விமானிகளுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

கழிப்பறை இடைவேளை தொடர்பில் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் இருந்து கொழும்பு சென்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் விமானிகளுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விமானிகளுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துணை விமானி அறையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு பெரும் அச்ச நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சர்ச்சைக்குரிய விமானி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் ளெியாகி உள்ளன.

இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ள நிலையில், அது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...