1 1 32
இலங்கைசெய்திகள்

வடக்கில் முப்படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு : முன்னெடுக்கப்படும் நடவடிக்கை

Share

வடக்கில் முப்படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு : முன்னெடுக்கப்படும் நடவடிக்கை

எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் மூலோபாய திட்டத்தினை உருவாக்கும் நோக்கில் முப்படைகளின் வசமுள்ள பொதுமக்களது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் (Northern Province) முப்படையினரின் வசம் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் ஒன்று, காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி தலைவர் ச.சதுன் தலைமையில் நடத்தப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் பாதுகாப்பு படைப்பிரிவில் உள்ள பொதுமக்களின் காணிகளின் தரவுகள் பட்டியல் மற்றும் பாதுகாப்பு படைப்பிரிவில் இல்லாத காணிகளை தரவுகளை தரப்படுத்தல் வேண்டும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள், வடக்கு – கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படைப்பிரிவின் காணி சுபீகரிப்பு, பெளத்த மயமாக்கல் தொடர்பாக ஜனாதிபதியுடன் கதைப்பதற்கு விசேட கலந்துரையாடல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கள மாயமாக்கல், தொல்பொருள் அகழ்வு, பெளத்த மயமாக்கல், காணி அதிகாரத்தினை மாகாணத்திற்கு பகிர்ந்தளிக்க வேண்டும், மதங்களால் உள்ள முரண்பாடுகள், இனங்களுக்கிடையில் பிரச்சினை, வனவிலங்கு அரச திணைக்களங்கள் மக்களின் காணி ஆக்கிரமிப்பு தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் போன்ற விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டப்டடுள்ளன.

மேலும், வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் காணிகளை கொண்டுள்ள மக்கள் தமது காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...