tamilnaadi 3 scaled
இலங்கைசெய்திகள்

கிழக்கை மீட்க வந்தவர்கள் திசை தெரியாது செயல்படுகின்றனர்

Share

கிழக்கை மீட்க வந்தவர்கள் இப்போது கிழக்கு எந்த திசையில் இருக்கின்றது என்று தெரியாதபடி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய காலகட்டத்தில் பேசு பொருளாக இருக்கின்ற முக்கியமான விடயம் வரி விதிப்பு முறையே.

அதைவிட மின்சார சபையை தனியார் மையப்படுத்துகின்ற விடயம் தொடர்பாகவும் பேசுகின்றார்கள்.

எந்த விடயமாக இருந்தாலும் இது ஒரு ஜனநாயக ஆட்சி நடைபெறுகின்ற, மக்களாட்சி நடைபெறுகின்ற நாடு என்கின்ற வகையில் மக்களுக்கு சார்பாக அந்த தீர்மானங்கள் இருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

இல்லை என்றால் எதிர்வரும் தேர்தல்களில் அவர்கள் தக்க பாடங்களை புகட்டுவார்கள் என்பதில் எதுவிதமான கருத்து வேறுபாடு இல்லை.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள். ஆனால் தை பிறந்ததும் பதினைந்து வீதமாக இருந்த வற் வரி 18 விதமாக அதிகரித்திருக்கின்றது.

அத்தோடு இந்த வரியின் பொருட்களின் பட்டியலும் நீண்டு கொண்டு செல்கின்றது. எனவே மக்கள் இந்த வருடத்தில் ஏதாவது அரசாங்கம் தங்களுக்கு ஒரு வருட ரீதியான பரிசு தரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற போது இப்போது அவர்கள் வரிகளை தந்திருக்கின்றார்கள்.” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...