tamilnaadi 3 scaled
இலங்கைசெய்திகள்

கிழக்கை மீட்க வந்தவர்கள் திசை தெரியாது செயல்படுகின்றனர்

Share

கிழக்கை மீட்க வந்தவர்கள் இப்போது கிழக்கு எந்த திசையில் இருக்கின்றது என்று தெரியாதபடி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய காலகட்டத்தில் பேசு பொருளாக இருக்கின்ற முக்கியமான விடயம் வரி விதிப்பு முறையே.

அதைவிட மின்சார சபையை தனியார் மையப்படுத்துகின்ற விடயம் தொடர்பாகவும் பேசுகின்றார்கள்.

எந்த விடயமாக இருந்தாலும் இது ஒரு ஜனநாயக ஆட்சி நடைபெறுகின்ற, மக்களாட்சி நடைபெறுகின்ற நாடு என்கின்ற வகையில் மக்களுக்கு சார்பாக அந்த தீர்மானங்கள் இருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

இல்லை என்றால் எதிர்வரும் தேர்தல்களில் அவர்கள் தக்க பாடங்களை புகட்டுவார்கள் என்பதில் எதுவிதமான கருத்து வேறுபாடு இல்லை.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள். ஆனால் தை பிறந்ததும் பதினைந்து வீதமாக இருந்த வற் வரி 18 விதமாக அதிகரித்திருக்கின்றது.

அத்தோடு இந்த வரியின் பொருட்களின் பட்டியலும் நீண்டு கொண்டு செல்கின்றது. எனவே மக்கள் இந்த வருடத்தில் ஏதாவது அரசாங்கம் தங்களுக்கு ஒரு வருட ரீதியான பரிசு தரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற போது இப்போது அவர்கள் வரிகளை தந்திருக்கின்றார்கள்.” என்றார்.

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...