3 25
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தீவிர பாதுகாப்பு

Share

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தீவிர பாதுகாப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களில் 25 வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளனர்.

வேட்பாளர்களில் 09 பேர் பாதுகாப்பு கோரவில்லை எனவும், 04 பேர் பாதுகாப்பு வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட 24 மணித்தியால விசேட நடவடிக்கை அலுவலகங்களில் அறிக்கைகள் பெற்று அவசியமான பாதுகாப்பு வழங்கப்படும்.

பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படை அல்லது சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர்கள் கலந்து கொள்ளும் கடைசி கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன், அந்த இடங்கள் தொடர்பில் உளவுத்துறை அறிக்கைகள் பெறப்படும்.

கூட்டத்திற்கு சில மணி நேரம் முன்னதாக, தேவையான பாதுகாப்பை அளித்து கூட்டம் முடிந்த பின் அறிக்கைகள் பெறப்படும்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...