rtjy 216 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸ் அராஜகத்துக்கு உடன் முடிவு கட்டுங்கள்

Share

பொலிஸ் அராஜகத்துக்கு உடன் முடிவு கட்டுங்கள்

“வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் பொலிஸாரின் அராஜகம் தொடர்ந்து வருகின்றது. அவர்களால் சந்தேகநபர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றார்கள். இதற்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்களின் பாதுகாவலர்களாக இருக்க வேண்டிய பொலிஸார் தொடர்ந்தும் அராஜகம் புரிந்து வருகின்றனர். அவர்களால் மக்கள் பிரதிநிதிகளுக்கு கூட அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

சந்தேகநபர்களைக் கொடூர சித்திரவதைகள் மூலம் அவர்கள் கொலை செய்து வருகின்றனர்.

அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞர் பொலிஸாரின் மோசமான சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதற்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...