26
இலங்கைசெய்திகள்

விரிவான கூட்டு நடவடிக்கை: வாகன மோசடிகளை கண்டறிய களமிங்கும் பொலிஸார்!

Share

விரிவான கூட்டு நடவடிக்கை: வாகன மோசடிகளை கண்டறிய களமிங்கும் பொலிஸார்!

கடந்த அரசாங்கத்தின் சில அரசியல்வாதிகள் மற்றும் அரசு தொடர்பான உயரதிகாரிகள் பயன்படுத்திய பதிவு செய்யப்படாத வாகனங்களைக் கண்டறிய விரிவான கூட்டு நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ், சுங்கம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றின் கீழ் குறித்த நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வாறான வாகனங்கள் தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்தே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக ஒருங்கமைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும், சட்டவிரோத உதிரிபாக இறக்குமதி போன்றவற்றை கண்டறிய இதன்முலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதன்படி, இதுபோன்ற நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் முன்னாள் உயரதிகாரிகளின் வசம் இன்னும் இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வாகனங்களை ஒப்படைக்காமல் வெவ்வேறு இடங்களில் மறைத்து வைத்து விட்டு சென்றமை தொடர்பிலும் பல முறைபாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் கிடைக்கப்பெறும் தகவல்களை நிராகரிக்கப் போவதில்லை எனவும், அரச வாகனங்கள் மற்றும் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் மறைத்தல் தொடர்பிலான எந்தவொரு தகவல்களையும் உடனடியாக பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...