இலங்கைசெய்திகள்

விரிவான கூட்டு நடவடிக்கை: வாகன மோசடிகளை கண்டறிய களமிங்கும் பொலிஸார்!

Share
26
Share

விரிவான கூட்டு நடவடிக்கை: வாகன மோசடிகளை கண்டறிய களமிங்கும் பொலிஸார்!

கடந்த அரசாங்கத்தின் சில அரசியல்வாதிகள் மற்றும் அரசு தொடர்பான உயரதிகாரிகள் பயன்படுத்திய பதிவு செய்யப்படாத வாகனங்களைக் கண்டறிய விரிவான கூட்டு நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ், சுங்கம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றின் கீழ் குறித்த நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வாறான வாகனங்கள் தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்தே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக ஒருங்கமைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும், சட்டவிரோத உதிரிபாக இறக்குமதி போன்றவற்றை கண்டறிய இதன்முலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதன்படி, இதுபோன்ற நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் முன்னாள் உயரதிகாரிகளின் வசம் இன்னும் இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வாகனங்களை ஒப்படைக்காமல் வெவ்வேறு இடங்களில் மறைத்து வைத்து விட்டு சென்றமை தொடர்பிலும் பல முறைபாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் கிடைக்கப்பெறும் தகவல்களை நிராகரிக்கப் போவதில்லை எனவும், அரச வாகனங்கள் மற்றும் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் மறைத்தல் தொடர்பிலான எந்தவொரு தகவல்களையும் உடனடியாக பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...