rtjy 105 scaled
இலங்கைசெய்திகள்

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

Share

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

இலங்கையில் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும் விசேட பாதுகாப்பு நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது நேற்று(10.09.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையிலான குழுவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது 4000க்கும் மேற்பட்ட அதிகாரிகளை உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக இந்த இரண்டு மாகாணங்களிலும் முக்கியமான பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடிப்படை, குற்றப் புலனாய்வுத் துறை, அரச புலனாய்வு சேவை , பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் பிற பொலிஸ் பிரிவுகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையானது மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...