20 11
இலங்கைசெய்திகள்

நகைகளை அடகு வைத்த மக்களுக்கு சலுகை…!

Share

நகைகளை அடகு வைத்த மக்களுக்கு சலுகை…!

தங்க நகைகளை அடகு வைத்திருக்கும் மக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள விடயமானது தேர்தலில் வாக்களிப்பதற்கு வழங்கப்படும் இலஞ்சமா என கொழும்பு பல்கலைக்கழத்தின் (University of Colombo) பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

எனினும் கடந்த கால பொருளாதார நெருக்கடிகளால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான இலங்கை மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து விதமான சலுகைகளையும் அனுபவிக்க தகுதி உடையவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததன் பின்னர் நாட்டில் தங்க நகைகளை அடகு வைக்கும் மக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்திருந்தது.

இவ்வாறு வங்கிகளில் அடகு வைத்த நகைகளை இதுவரை மீட்க முடியாத இக்கட்டான நிலையில நாட்டில் பலர் உள்ளனர். இந்தநிலையில், தங்க நகைகளை அடகு வைத்திருக்கும் மக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் எந்தவித கரிசனையும் காட்டாமல் இருந்த அரசாங்கம் தங்க நகை அடமானம் தொடர்பில் கொண்டு வரும் திட்டம் எந்த அளவு நம்பகமானது என சந்தேகம் எழுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...