20 11
இலங்கைசெய்திகள்

நகைகளை அடகு வைத்த மக்களுக்கு சலுகை…!

Share

நகைகளை அடகு வைத்த மக்களுக்கு சலுகை…!

தங்க நகைகளை அடகு வைத்திருக்கும் மக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள விடயமானது தேர்தலில் வாக்களிப்பதற்கு வழங்கப்படும் இலஞ்சமா என கொழும்பு பல்கலைக்கழத்தின் (University of Colombo) பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

எனினும் கடந்த கால பொருளாதார நெருக்கடிகளால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான இலங்கை மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து விதமான சலுகைகளையும் அனுபவிக்க தகுதி உடையவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததன் பின்னர் நாட்டில் தங்க நகைகளை அடகு வைக்கும் மக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்திருந்தது.

இவ்வாறு வங்கிகளில் அடகு வைத்த நகைகளை இதுவரை மீட்க முடியாத இக்கட்டான நிலையில நாட்டில் பலர் உள்ளனர். இந்தநிலையில், தங்க நகைகளை அடகு வைத்திருக்கும் மக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் எந்தவித கரிசனையும் காட்டாமல் இருந்த அரசாங்கம் தங்க நகை அடமானம் தொடர்பில் கொண்டு வரும் திட்டம் எந்த அளவு நம்பகமானது என சந்தேகம் எழுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...

25 690d6d53c26d1
செய்திகள்அரசியல்இலங்கை

வைத்தியர் சமல் சஞ்சீவ விமர்சனம்: 2026 பட்ஜெட்டில் மருத்துவர்கள் புறக்கணிப்பு – விலங்கு நலனுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026ஆம்...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...