ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு

Share

ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பான தமது முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை ஆகஸ்ட் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

இந்த விசேட அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எழுத்து மூலம் இன்றைய தினம் (04.08.2023) அறிவித்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கடந்த (ஜூலை) 26ஆம் திகதி நடைபெற்ற சர்வகட்சி மாநாடு நடைபெற்றது.

இதன்போது, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முழு நாட்டையும் பாதிக்கும் விடயம் என்பதால், அனைத்துக் கட்சிகளுடனும் இது குறித்து விவாதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பான முடிவெடுப்பது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்டி, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளையும் யோசனைகளையும் ஓகஸ்ட் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...