tamilnaadi 88 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் எம்.பிக்கள் புத்திஜீவிகளுடன் இரவோடு இரவாக இந்தியா அவசர சந்திப்பு

Share

யாழில் எம்.பிக்கள் புத்திஜீவிகளுடன் இரவோடு இரவாக இந்தியா அவசர சந்திப்பு

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் புதிய இந்தியத் தூதுவர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.கே.சிவஞானம், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் தரப்பினரும், சிவில் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதேவ‍ேளை, இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது போது யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார்.சந்தோஷ் ஜாவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் உடன் இருந்தனர்.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட அரசியல் பிரமுகர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு இந்திய அரசாங்கமானது 500 ஏக்கர் நிலத்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என இலங்கைக்கான இந்திய தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இருநாட்டு கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பை வலுவாக எதிர்ப்பதான கருத்தை இலங்கைக்கான இந்திய தூதுவரிடம் பகிரங்கமாக அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். எ சுமந்திரன், தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இந்தியாவுடனான விசேட உறவில் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு தாம் முன்வந்துள்ளதாக சுமந்திரன் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஆகவே, இந்தியாவின் புதிய தூதுவருடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பானது ஆரோக்கியமாக அமைந்தது எனவும் கூறினார்.

இலங்கையை பூகோள அரசியல் ரீதியில் பார்க்காமல் இந்தியாவை போன்று தமிழ் மக்கள் மீதும் கரிசனையுடன் சர்வதேசம் செயற்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதன்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிடின் இலங்கை அரசியலானது பாரதூரமான விளைவுகளை சந்திக்கக்கூடும்.

மேலும், சர்வதேச சமூகமானது பூகோள அரசியல் என்ற போர்வையில் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை பேசாவிட்டாலும் கூட கிடைக்கும் சந்தர்ப்பங்களின் எங்களது கோரிக்கைகளை பதிவு செய்யவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. என்றார்

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...